புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2014

அரசாங்கத்தில் இருந்து மேலும் நான்கு பேர் மைத்திரி பக்கம் தாவினர்
வலப்பனை பிரதேச சபையின் தலைவர் ஜகத் குமார சமரசேன, பிரதேச சபை உறுப்பினர் ஜயந்த குலரத்ன, ஹிக்கடுவ பிரதேச சபை உறுப்பினர் ஞானதாச சில்வா, தேசிய சுதந்திர முன்னணியின் ரத்கம தொகுதி அமைப்பாளர் அசேல கோசல ரங்கநாத் ஆகியோர் இன்று பொது எதிர்க்கட்சியில் இணைந்தனர்.
கொஸ்கொடவில் இன்று நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக் கூட்டத்தில் அவர்கள் இவ்வாறு எதிரணியில் இணைந்தனர்.
பணத்திற்காகவே சிலர் அரசாங்கத்தில் இணைந்து வருவதாகவும் அதனை தவிர அவர்களுக்கு வேறு காரணங்கள் இல்லை எனவும் வலப்பனை பிரதேச சபை தலைவர் ஜகத் குமார தெரிவித்தார்.
ஊழல், மோசடிகள் மற்றும் நாட்டில் நடக்கும் சுயநலமான ஆட்சி காரணமாவே தாம் எதிரணியில் இணைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad