புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜன., 2015

மைத்திரிக்கு 53 வீத வாக்கு என்ற கருத்துக்கணிப்புக்கு தாம் பொறுப்பல்ல: கொழும்பு பல்கலைக்கழகம்


எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 53 வீத வாக்குகள் கிடைக்கும் என்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு அறிக்கைக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கே.ஏ.எஸ் எட்வேட் இதனை அறிவித்துள்ளார்.
குறித்த கருத்துக்கணிப்பு பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்கப்படாமல் தனிப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே கருத்துக்கணிப்புக்கும் பல்கலைக்கழகத்துக்கும் தொடர்பில்லை என்று பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்ட பல்கலைக்கழகத்தின் இரண்டு பேராசிரியர்கள் அதற்கான அறிக்கையையும் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad