புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

கிழக்கில் அட்டகாசம் புரியும் இனியபாரதியின் வீடு மக்களால் சுற்றி வளைப்பு


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.புஷ்பகுமார் (இனியபாரதி) இன்று அவரது வீடு அமைந்துள்ள திருக்கோயில் பகுதியில் வைத்து மக்களால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதல்களுக்கு உள்ளானார்.
இச்சம்பவமானது இன்று காலை திருக்கோயில் பகுதியில் அவரது வீட்டில்வைத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
இலங்கை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியினை தெரிவு செய்யும் தேர்தல் முடிவுகள் எதிரணிக்கு சாதகமாக வெளிவந்து கொண்டிருக்கும் தருணத்தில் இன்று அவரது வீட்டை முற்றுகை இட்ட பொதுமக்கள் அவரை வெளியே வரவிடாமல் தடுத்து வைத்துள்ளனர்.
இதனை அறிந்த பொலிசாரும் இராணுவத்தினரும் அவரது இல்லத்திற்கு விரைந்து சென்று போதும் எதுவும் செய்ய முடியாமல் தவிர்த்துக்கொண்டு இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் காட்டிய அட்டகாசத்திற்கு மக்கள் கொடுக்கும் பரிசு அதுதான் எனவும் அவரை அந்த கிராமத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் அந்தளவிற்கு மிகவும் அராஜகம் புரிந்த ஒரு துரோகி எனவும் மக்களுக்குள் பேசிக்கொள்வதாக அறிய முடிகிறது.

ad

ad