வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடந்த காலங்களில் ஈபிடிபியினர் தொடர்ச்சியாக மகேஸ்வரி நிதியமூடாக மண் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன் மூலம் கோடிக்கணக்கான வருமானத்தைப் பெற்று வந்தனர்.
ஆனால் அண்மையில் ஈபிடிபியின் மணல் கொள்ளையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்தியிருந்தது.
இந்நிலையில் கூட்டமைப்புக்கு எதிராகவும் மீளவும் மண்ணினை கொள்ளையடிக்க கோரியும் இன்று காலை ஈபிடிபியின் மகேஸ்வரி நிதியத்தினர் வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.