புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2015

மணல் அகழ்வில் ஈடுபட அனுமதிக்குமாறு ஈபிடிபி ஆர்ப்பாட்டம



வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வில் தொடர்ந்தும் ஈடுபட அனுமதி கோரி ஈபிடிபியினர் இன்று ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடந்த காலங்களில்  ஈபிடிபியினர் தொடர்ச்சியாக மகேஸ்வரி நிதியமூடாக மண் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன் மூலம் கோடிக்கணக்கான வருமானத்தைப் பெற்று வந்தனர்.
ஆனால் அண்மையில் ஈபிடிபியின் மணல் கொள்ளையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்தியிருந்தது.
இந்நிலையில் கூட்டமைப்புக்கு எதிராகவும் மீளவும் மண்ணினை கொள்ளையடிக்க கோரியும் இன்று காலை ஈபிடிபியின் மகேஸ்வரி நிதியத்தினர் வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

ad

ad