புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2015

தலைமைத்துவ பயிற்சியில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து ஆராயவும்: பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம்


பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவ பயிற்சியின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இராணுவ பயிற்சி முகாம்களில் கொடுக்கப்பட்ட பயிற்சியின் போது மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் நடத்துனர் நஜித் இந்திக்க தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவ பயிற்சிகளை நிறுத்துவதாக உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தலைமைத்துவ பயிற்சியின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நடத்துனர் தெளிவுபடுத்தினார்.

ad

ad