புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2015

இலங்கை வரும் நிஷா; வடக்கு முதல்வரையும் சந்திப்பார்


இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரனை சந்திக்கவுள்ளார்.
 
இரு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் இலங்கைக்கு வரவிருக்கும் நிஷா நாளை மறுதினம் கொழும்பில் வடக்கு முதல்வரை சந்திக்கவுள்ளார். 
 
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணை தொடர்பிலான பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
இதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா கூட்டத் தொடரில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் புதிய அரசு கால அவகாசம் கேட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரிடம்  ஐ.நா விசாரணை பிற்போடப்படலாம் என மக்கள் அச்சமடைந்து இருப்பததாக  சுட்டிக்காட்டியிருந்தார்.
 
எனவே நாளைய தினம் இலங்கைக்கு வரவுள்ள நிஷா பிரதமர், சிவில் சமூகத்தினர், மதத்தலைவர்கள் , அரச அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
 
மேலும் நாளை மறுதினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதன்போதே வடக்கு முதல்வரையும் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதேவேளை, தெற்கு மற்றும் மத்திய ஆசிய துணை உதவி செயலாளர் அதுல் கெஷாப்பும் வருகை தரவிருக்கின்றார். புதிய அரசாங்கத்துடன் அவர் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துவதுடன் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

ad

ad