புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2015

ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை ; மிலேச்சைத்தனத்திற்கு வடக்கு அவையில் கண்டனம்


ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள்  சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாதத்தின்  இரண்டாம் வாரத்தில்  இந்தியா ஆந்திரமாநிலம்  திருப்பதிக்கு அருகில்  20 தமிழர்கள் செம்மரக் கடத்தலுடன்  தொடர்புள்ளவர்கள் என்று கூறி செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

சம்பவம்  தொடர்பில்  இன்று நடைபெற்று வரும் 28 ஆவது வடக்கு மாகாண சபையின்  மாதாந்த கூட்டத்தில்  வடக்கு முதல்வரால்  சபையில்  எடுத்துக் கொள்ளப்பட்டு குறித்த செயற்பாட்டிற்கு கண்டன தீர்மானமும்  நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் க.வி. விக்கினேஸ்வரன் ,

20 தமிழர்கள்  எதுவித விசாரணையும்  இன்றி சுட்டுக்கொலை செய்யப்பட்டதனால்  அங்கு தொடர் பதட்டம் நிலவியது. அத்துடன்  இவர்கள்  தமிழர்கள்  என்ற காரணத்தினால்  தானா விசாரணைகள்  மேற்கொள்ளப்படவில்லை என்றும்  சந்தேகிக்கம் எழுகின்றது.

இந்த செயற்பாடு கடந்த காலங்களில்  இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களை நினைவுபடுத்துகின்றது. எனவே இவ்வாறான செயற்பாட்டினை அப்பாவி  தமிழ் மக்கள்  மீது மிலேச்சைத்தனமான மனித உரிமை மீறல் செயற்பாட்டிற்கு வடக்கு மாகாண சபை கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது.

அத்துடன்  கொல்லப்பட்டவர்களின்  குடும்பங்களுக்கு அனுதாபங்களைத்தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும்  அவர்களது ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் என்றும்  அவர்  மேலும் தெரிவித்தார்.

ad

ad