புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2015

மே17 மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை அருகே இலட்சம் தமிழராய் ஒன்று கூடுவோம்


தமிழர் கடலை நாம் ஒருபோதும் இன அழிப்பு சக்திகளுக்கு விட்டுத்தர முடியாது  என மே 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த கடல் நமது கடல். அது தமிழர் பெருங்கடல், ஈழத்தில் நடைபெற்றதும், நடைபெறுவதும் இனப்படுகொலை.
தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை தமிழீழ விடுதலை.
மே17 ம் திகதி மாலை 4 மணியளவில் தமிழர் கடலான மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை அருகே இலட்சம் தமிழராய் ஒன்று கூடுவோம் என மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையை மறவோம்.
எந்தக் கடலில் தமிழர்கள் கொல்லப்பட்டார்களோ, எந்தக் கடலில் தமிழர்களின் ஓலம் கலந்துள்ளதோ, அந்த தமிழர் கடலின் ஓரம் கூடுவோம்.
கொல்லப்பட்ட நம் போராளி மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
தமிழீழ விடுதலையை உயர்த்திப் பிடிப்போம்.
அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள் என மே 17 இயக்கம் அனைத்து தமிழர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

ad

ad