புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2015

மைத்திரியினால் வேட்புரிமை வழங்கப்படாத உறுப்பினர்கள்


எதிர்வரும் பொது தேர்தலின் போது இலஞ்ச ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு வேட்புரிமை வழங்காமல் இருப்பதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய 08 உறுப்பினர்களுக்கு வேட்புரிமை இழக்க நேரிடம் என தகவல் வெளியாகியுள்ளது.
நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவலுக்கமைய, இவர்களில் துமிந்த சில்வா, மேர்வின் சில்வா, லக்ஷ்மன் வசந்த பெரேரா, சஜின் வாஸ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, சரன குணவர்தன, மஹிந்தாநந்த அலுத் கமகே ஆகியோர் உள்ளடங்குவார்கள்.
இவர்களில் பலர் நிதி மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு, சிலர் வன்முறைகளில் ஈடுபடல் மற்றும் போதை பொருள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள்.
அவர்களுக்கு வேட்புரிமை வழங்குவதற்கு இதற்கு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், அவர்களுக்கு தொகுதி அமைப்பாளர்கள் பதவி மாத்திரமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இதுவரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மைத்திரி தரப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாரிய அளவிலான எதிர்ப்பு காரணமாக அவர்களுக்கு வேட்புரிமையை வழங்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ad

ad