புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2015

 தேவைப்பட்டால் மீண்டும் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனிடம் விசாரணை நடத்தப்படும் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.


தயாநிதி மாறன் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த போது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தனது சகோதரரின் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, 2013ஆம் ஆண்டில் தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். முன்னாள் பொது மேலாளர் பிரம்மநாதன் மற்றும் தயாநிதி மாறனின் சகோதரர் தொலைக்காட்சி நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது டெல்லி சி.பி.ஐ. போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் கவுதமன், அவரது சகோதரர் டி.வி.யின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் கண்ணன், எலெக்ட்ரீஷியன் ரவி ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.

இந்நிலையில்,  தயாநிதி மாறனை ஜூலை 1ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, கடந்த 1ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில்  தயாநிதிமாறன் ஆஜரானார். அவரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின்போது, தயாநிதிமாறனின் 65 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியவில்லை எனவும், நினைவில் இல்லை என்றும் தயாநிதிமாறன் கூறியதாகவும் சி,பி,ஐ, வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இதையடுத்து, நேற்றும் (2ஆம் தேதி) தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை சுமார் 6 மணி நேரம் நடந்தது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், சி.பி.ஐ. அதிகாரிகளிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பெறப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அளித்துள்ளேன். அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன்'' எனக் கூறினார்.

இந்நிலையில், 3வது நாளாக இன்றும் (3ஆம் தேதி) முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை சுமார் 6 மணி நேரம் நடைபெற்றது.

இதன் பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், ''தயாநிதி மாறனிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்திருக்கிறது. அவரிடம் இன்னும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறோம்.

தேவைப்பட்டால் மீண்டும் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனிடம் விசாரணை நடத்தப்படும்'' என்றனர்.

ad

ad