புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2015

முன்னாள் போராளிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!


முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிடுவது தற்போதைய அரசியல் சூழல்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அவர்களுக்கு தோல்வியொன்று ஏற்படுமாயின் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் ஆராயவுள்ளமை குறித்து வினவிய போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது அரசியல் களநிலவரங்களைப் பார்க்கின்ற போது இனவாதத்தைத் தூண்டி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தரப்பினர் மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளனர்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை முள்ளிவாய்க்காலில் முற்றாக அழித்து விட்டதாக மார்தட்டி கடந்த காலங்களில் தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள்.
அதுமட்டுமின்றி முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்வதாக சர்வதேசத்திற்கு ஒரு போலியான பிரசாரத்தை காட்டிக் கொண்டவர்கள், அவர்களுக்கு நடமாடும் சுதந்திரத்தையோ கருத்து வெளியிடும் சுதந்திரத்தையோ வழங்கியிருக்கவில்லை.
வடக்கிலிருந்து உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாமைக்கும், ஒரு இராணுவ வீரர் கூட குறைக்கப்படாமைக்கும் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கி விடுவார்கள் என்றே காரணம் கூறி வந்தனர்.
இவ்வாறான நிலையில் அதே அணியினர் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
இவ்வாறான தருணத்தில் முன்னாள் விடுதலைப் போராளிகளைக் கொண்ட அணியொன்று பொதுத் தேர்தலில் போட்டியிடுவது என்பது இனவாதிகளுக்கும் புலிகளை மையமாக வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் ஏது நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.

ad

ad