புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2015

 

வீணைச் சின்னத்தில் தனித்து போட்டி! டக்ளஸ் உறுதி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி வீணை சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல கட்சிகளிடமிருந்து தேர்தலுக்கான அழைப்பு தமக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்றைய தினம் யாழ்.நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாம் இந்த ஆட்சியை உருவாக்கியதாக கூறுகின்றது. ஆனால் இவர்களால் தமிழ் மக்களின் நிலங்களை விடுவிக்க முடிந்ததா? அரசியல் கைதிகளை விடுவிக்க முடிந்ததா? இல்லை.
முன்னைய ஆட்சியில் விடுவிக்க இருந்த நிலங்களை விடுவித்தார்கள்.
அதற்கு மேல் என்ன செய்தார்கள்? எதுவுமேயில்லை. இந்த நிலையில் தற்போது கூறுகின்றார்கள் அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதியை மீறிவிட்டதாம். எனவே மாற்றம் ஒன்றை உருவாக்காமல் தமிழர் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றார்.

ad

ad