புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2015

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக, சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது - சம்பந்தன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தன் மீண்டும் சுயாட்சி அதிகாரங்களை கோரி நிற்பதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அண்மையில் சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலை தமிழ் அபிவிருத்தி மையத்தினால் திருமலையில் நடத்திய நிகழ்வு ஒன்றில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக, சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என சம்பந்தன் கூறியதாக சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பந்தனின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து உலகத் தமிழர் பேரவையும் சுயாட்சி அதிகாரங்கள் குறித்து கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
லண்டனில் வைத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறான ஓர் செய்தியை சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் இந்த செய்தி குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை.

ad

ad