புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2015

இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல் : பார்வையாளர் அரங்கை சுற்றி பாதுகாப்பு வலை


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று 22ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் நான்காவது நாள் போட்டி கொழும்பு, கெத்தாராம
ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
அதன் அடிப்படையில் பார்வையாளர் அரங்கை சுற்றி பாதுகாப்பு வலைகள் போட்டு மூடப்பட்டுள்ளன என்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.  
 
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்தே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
 
இவ்விரு அணிகளுக்கும் இடையில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற மூன்றாவது போட்டியின் போது மைதானத்துக்கு வெளியே இருந்த குழுவினர் வீசிய கற்கள், மைதானத்துக்குள் விழுந்ததையடுத்து பார்வையாளர் அரங்கிலிருந்த இரு குழுக்களுக்கிடையே மோதல்கள் ஏற்பட்டன. அவ்வாறான மோதல்களை தவிர்க்கும் வகையிலேயே வலை போடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
இந்த மைதானத்தில் நடைபெறுகின்ற அடுத்தடுத் போட்டிகளின் போது பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையிரை கூடுதலாக அமர்த்துதல், பார்வையாளர்களை முறையாக சோதனைக்கு உட்படுத்தல் மற்றும் பார்வையாளர் மதுபோதையில் செல்லுதல் மற்றும் மதுபானங்களை எடுத்துசெல்வதை தடுப்பதற்கு கூடுதலான நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. 
 

ad

ad