புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2015

12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளன!– சிங்கள ஊடகம்

12 நாடுகளும் 26 அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
12 வெளிநாடுகளும், 26 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 133 கோடி ரூபா பணம் வழங்கியுள்ளன.
அண்மையில் முல்லைத்தீவில் மீட்கப்பட்ட இரகசிய ஆவணமொன்றில் இந்த விடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரிட்டன், இத்தாலி, பொஸ்ட்வானா, அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, நோர்வே, நியூசிலாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம், புலிகள் ஆயுதம் கொள்வனவு செய்வதற்காக இந்தப் பணத்தை வழங்கியுள்ளதாக திவயின சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad