" உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்...!" என அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் தொடர்பாக தமிழக
முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்அப் மூலம் தமிழக மக்களுக்கு ஆற்றியுள்ள உரையில் கூறியுள்ளார்.சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தொடர்ந்து, மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்அப் மூலம் உரையாற்றி உள்ளார்.
அதில், ''கடந்த 100 ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர்மழை ஏற்படுத்திய வெள்ளச்சேதங்களால் நீங்கள் அடைந்த துயரத்தை நினைத்து நான் வருந்துகிறேன். கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன்.
உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கு சுயநலம் கிடையாது. என்னை நீங்கள் 'அம்மா' என்று அழைக்கும் ஒரு சொல்லுக்காக என்னை அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். எத்துயர் வரினும் இந்த தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள்'' எனக் கூறியுள்ளார்.
அவரது முழு பேச்சை கேட்க...
தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாட்ஸ் - அப் ஆடியோவின் உரை:
’’வணக்கம். உங்கள் அன்பு சகோதரி
ஜெயலலிதா பேசுகிறேன். கடந்த 100 ஆண்டுகள் கண்டிராத மிகப்பெரும் தொடர்மழை ஏற்படுத்திய வெள்ளச்சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன்.
ஜெயலலிதா பேசுகிறேன். கடந்த 100 ஆண்டுகள் கண்டிராத மிகப்பெரும் தொடர்மழை ஏற்படுத்திய வெள்ளச்சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன்.
கவலை வேண்டாம்; இது உங்கள் அரசு. எதையும் எதிர்கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள். உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப்பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு, புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச்செய்வேன். இது உறுதி. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும், புனரமைப்பு பணிகளையும் முழு வீச்சில் முடிக்கிவிட்டிருக்கிறேன்.
அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், காவல்துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினரும், முப்படையினரும், தேசிய மற்றும் மாநில மீட்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் அயராது தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் கடுமையாக உழைத்தார்கள்.
உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான். என் பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரை மறந்துபோகும் அளவிற்கு, நீங்கள் அழைக்கின்ற, ‘அம்மா’ என்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்ப்பணித்து, உழைத்துக் கொண்டிரு க்கிறேன்.
இந்த அரசு இயற்கை பேரிடர்களை, வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக் கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நன்றி.’’