கேரள மாநிலத்தின் போக்குவரத்து ஆணையர் டோமின் தச்சங்கரி, கடந்த 29 ஆண்டுகளாக எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார் என்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீலேகா குற்றஞ்சாட்டி உள்ளார்.
கேரள மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ஸ்ரீலேகா (55), தற்போது மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைவராக உள்ளார். இவர், போக்குவரத்து ஏ.டி.ஜி.பி. டோமின் தச்சங்கரி தனக்கு தொல்லை கொடுத்து வருவதாக முகநூலில் பதிவு செய்துள்ளார்.
அதில், ''கடந்த 1987-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வுக்கு நான் பயிற்சி பெற்ற காலத்தில் இருந்தே தச்சங்கரி எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அவரது தொல்லைகளைக் கடந்த 29 ஆண்டுகளாகத் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.
இதனிடையே, எனக்கு எதிராக லஞ்ச வழக்கு விசாரணைக்கு ஊழல் கண்காணிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து ஆணையராக நான் பதவி வகித்த காலத்தில், தனியார் பள்ளிப் பேருந்து ஒன்றுக்கு உரிமம் வழங்கியபோது நான் லஞ்சம் வாங்கியதாக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இது, என்னை வழக்கில் சிக்கவைப்பதற்காக, தச்சங்கரி தீட்டியிருக்கும் சதித் திட்டமாகும். அதே நேரத்தில், அரசுக்கு எதிராகவோ, நீதிமன்றத்துக்கு எதிராகவோ அல்லது காவல் துறைக்கு எதிராகவோ எதுவும் நான் கூறவில்லை" என்று பதிவு செய்துள்ளார்.
கேரள மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ஸ்ரீலேகா (55), தற்போது மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைவராக உள்ளார். இவர், போக்குவரத்து ஏ.டி.ஜி.பி. டோமின் தச்சங்கரி தனக்கு தொல்லை கொடுத்து வருவதாக முகநூலில் பதிவு செய்துள்ளார்.
அதில், ''கடந்த 1987-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வுக்கு நான் பயிற்சி பெற்ற காலத்தில் இருந்தே தச்சங்கரி எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அவரது தொல்லைகளைக் கடந்த 29 ஆண்டுகளாகத் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.
இதனிடையே, எனக்கு எதிராக லஞ்ச வழக்கு விசாரணைக்கு ஊழல் கண்காணிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து ஆணையராக நான் பதவி வகித்த காலத்தில், தனியார் பள்ளிப் பேருந்து ஒன்றுக்கு உரிமம் வழங்கியபோது நான் லஞ்சம் வாங்கியதாக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இது, என்னை வழக்கில் சிக்கவைப்பதற்காக, தச்சங்கரி தீட்டியிருக்கும் சதித் திட்டமாகும். அதே நேரத்தில், அரசுக்கு எதிராகவோ, நீதிமன்றத்துக்கு எதிராகவோ அல்லது காவல் துறைக்கு எதிராகவோ எதுவும் நான் கூறவில்லை" என்று பதிவு செய்துள்ளார்.
இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தச்சங்கரி, "யாருக்கு யார் தொல்லை கொடுக்கிறார்கள் என்பதை துறையில் உள்ள அனைவரும் அறிவார்கள்; ஸ்ரீலேகாவுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறேன்'' என்று தெரிவித்து உள்ளார்.P