புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2016

மேல் நீதிமன்றில் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேல் நீதிமன்றங்களால் விசாரணைகள் நடாத்தப்பட்ட சகல வழக்குக்களிலும் சகல எதிரிகளையும் விடுதலை செய்ய வைத்த ஆற்றல்மிகுசட்டவாளர் கே வி தவராசா டெய்லி மிரர்

மனதிற் பட்டது - 13 சட்டத்தரணி தவராசா


சட்டத்தரணி தவராசா
மனிதம் கொண்ட பேரியக்கம் - 2

1981ஆம் ஆண்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட சட்டத்தரணி வீ.தவாராசா அவர்கள் ஆஜரான முதல் வழக்கே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டதுதான். நம் நாட்டடில் தொடரச்சியாக நான்கு மாதங்கள் இடம்பெற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரேயொரு வழக்கு இதுதான். இவ்வழக்கில் இவருக்குக் கிடைத்த வெற்றிதான் அவரை தனித்துவமிக்க அடையாளமொன்றினை நோக்கி நகர்த்தியது. 

இவர் ஆஜரான பெரும்பான்மையான வழக்குகள் பயங்கரவாத மற்றும் அவசரகாலச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டவைகளே. அதில் மிக முக்கியமான சில வழக்குள் அமிர்தலிங்கம் கொலை 1991, டென்மார்கிலிருந்து நாடுகடத்தப்பட்ட மாணவி சித்ரா வழக்கு 1996, டென்மார்க் ஊடகவியலாளர் நான்கு பேர் கைது செய்யப்பட்ட வழக்கு1996, கலதாரி ஹோட்டல் குண்டு வெடிப்பு1997, கடற்;படை வீரர் நவாப்தீன்; புலிகளுடன் தொடர்பென தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2000, புலனாய்வு அதிகாரி தெகிவளை பொலிஸ் விடுதியில்   சுட்டுக்கொலை 2003, லக்;ஸ்மன் கதிர்காமர்  கொலை 2005, பாகிஸ்தான் உயர்ஸ்;தானிகர் கொலை முயற்சி 2006, ரவிராஜ் கொலை 2006, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய மீதான கொலை முயற்சி 2006, ஊடகவியளாளர்களான மு.பரமேஸ்வரி, வ.யசிகரன், ய.வளர்மதி வழக்குகள் 2008, த.தே.கூ இன் 04எம்பிகளுக்கெதிரான வழக்கு-2008, காலித்துறைமுகத் தாக்குதல் 2006, ஐந்து மாணவர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணை 2008 (கோத்தபாய முகாம், கடற்படையினரின் திருகோணமலை இரகசிய சித்திரவதை முகாம் ஆகியன 23-6-2015ல் சான்றின் மூலம் பகிரங்கமானது) ஊடகவியளார் வித்யாதரன் கைது 2009, சுவிஸ்; பிரஜை கரன் கைது, (2013 புலிகளுடன் பணப்பரிமாற்றம் மேற்கொண்ட புலம் பெயர்தமிழர் வழக்கு விசாரனையில் விடுதலையான முதலாவது வழக்கு)

மேல் நீதிமன்றில் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு மேல் நீதிமன்றங்களால் விசாரணைகள் நடாத்தப்பட்ட  சகல வழக்குக்களிலும் தனது வாதத்தினால் சகல எதிரிகளையும் விடுதலை செய்ய வைத்தார்.    

இந்த வழக்குகளுக்கெல்லாம் அவர் ஆஜராகும் போது அவரைப் பார்த்து துப்பாக்கி புன்னகைத்தது மரணம் வியந்து நின்றது. அவருக்கு விடப்பட்ட அனைத்து அச்சுருத்தல்களையும் தாண்டி அவர் பயணித்தார். அவைகளை அவர் கணக்கிலெடுக்கவுமில்லை பொருட்டாக மதிக்கவுமில்லை, இனத்தின் மீது கொண்ட பற்று என்றால் என்னவென்று தவராசாவைப் பார்த்துக் தெரிந்துகொள்ளுங்கள் என்று நான் சொல்வேன்.

மாணவி வித்யா வழக்கில் கனேடிய  புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் அவர் ஆஜராகி பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தினார். ஒவ்வொரு முறையும் தனது பணத்தைச் செலவு செய்தே கொழும்பிலிருந்து வழக்காடச் சென்றார். வித்யாவின் படுகொலைக்குப் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் அதிகாரத்தின் பிடி பல்வேறுபட்ட திருகுதாளங்களில் அசுர ஆட்டம் ஆடி அவரை அவ்வழக்கில் இருந்து தூரமாக்கும் பணியில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குக் கொடுத்த நெருக்குதல் காரணமாகவும் அவரை அவ்வழக்கில் ஆஜராகப் பணித்த தரப்பினர் நீங்கிக் கொள்ளுமாறு வேண்டியதன் காரணமாகவும் சட்டத்தரணி தவரசா அதில் இருந்து விலகினார். தவராசா இல்லாத வழக்கை அவர்கள் இலகுவாக வெல்லலாம் என்று மதிப்பிட்டுக் காரியமாற்றுகின்றனர். அவரின் நேர்மைக்கும் போர்க்குனத்திற்கும் சவாலாக அமைந்ததுதான் இந்நிகழ்வு.
சட்டத்தரணி தவராசாவிற்கு அருகில் இருக்கின்ற இன்னொரு மாபெரும் பலம் 1986ஆம் ஆண்டு அவர் திருமணம் செய்து கொண்ட கௌரி சங்கரிதான்.

மனித உரிமை வழக்குகள் என்றால் நிச்சயம் அங்கு சட்டத்தரணி கௌரி சங்கரி பிரசன்னமாகி இருப்பார். பல நூற்றுக்கணக்கான மனித உரிமை வழக்குகளை இவர் தாக்கல் செய்திருக்கின்றார். மனித உரிமை வழக்குகள் என்றால் நீங்கள் நாட வேண்டிய ஒரேயொரு உன்னதமும் உண்மையுமிக்க உறுதியான நபர் இவர்தான். பல சட்டத்தரணிகள் மேற்கொள்ளும் கண்கட்டு வித்தைகளுக்கு அப்பால் இவர்கள் இருவரும் விதைத்திருக்கும் நேர்மை என்றும் சாய்ந்திடாத வான்மைமிக்கது. 

சுயநலம் ஏதுமற்ற ஒரு அரசியல் ஈடுபாட்டாளரைப் பார்ப்பதென்றால் நீங்கள் சட்டத்தரனி தவராசாவின் புன்னகை தவழும் முகத்தைப் பாருங்கள்
உறுதியும் பற்றுமிக்க ஒரு மக்கள் செயற்பாட்டாளரைப் பார்ப்பதென்றால் அமைதியே உருவான அவரின் மனைவி சட்டத்தரணி கௌரி சங்கரியின் சலனமற்ற முகத்தைப் பாருங்கள்.நன்றி டெய்லி மிரர் 

ad

ad