புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2016

வித்தியா படுகொலை வழக்கு! அரச தரப்பு சாட்சியாக மாறிய சந்தேகநபர் இருவரின் விளக்கமறியல் நீடிப்பு!

புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பில் அரச சாட்சியாக மாறிய சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் இ.சபேசன் உத்தரவிட்டார்.

வித்தியா படுகொலை தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் 10சந்தேக நபர்களைத் தவிர்ந்த இருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். ஆனால் அவர்கள் இருவரும் வித்தியா படுகொலைக்கு அரச தரப்பு சாட்சியாக மாறினர். அதனடிப்படையில் 10 சந்தேக நபர்களுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது, அரச தரப்பு சாட்சியாக மாறிய சந்தேக நபர்கள் இருவரையும் பிறிதொரு தினங்களில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வந்தனர்.

அதன்படி இன்றைய தினம் அரச தரப்பு சாட்சியாக மாறிய சந்தேகநபர்கள் இருவரும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது பதில் நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவை பிறப்பித்தார். 

ad

ad