சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய காந்தை, மக்கள் நலக்கூட்டணிக்கட்சித்தலைவர்கள் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ, ‘’ஏப்ரல் 10ம் தேதி சென்னையை அடுத்த மாமண்டூரில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் மாநாடு நடைபெறும். அம்மாநாட்டில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்’’ என்று தெரிவித்தார்.