எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டு எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கு கலந்துரையாடல்
ஒன்றுக்கான அழைப்பை விடுத்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் உலமா கட்சியின் தலைமையில் சிங்களக் கட்சித் தலைவர்கள் சிலர் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன்பாக சத்தியாக்கிரகம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், குறித்த கட்சித் தலைவர்களுக்கு அதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இதன்போது, கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைக்க கோரும் சம்பந்தனின் கோரிக்கைக்கான தமது எதிர்ப்பு சம்பந்தமான அறிக்கையை உலமா கட்சித் தலைவர் முபாறக் மௌலவி இரா.சம்பந்தனிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.