இலங்கை சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிறைவுகாண் தொழில்வல்லுனர் சேவைகள் மற்றும் துணை மருத்துவ சேவைகளின் பயிலுனர்களுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு விண்ணப்பங்களை அரச வர்த்தமானியூடாக கோரியுள்ளது. பொதுச்சுகாதார பரிசோதகர் பயிற்சியைத்தவிர ஏனைய 12 தொழிற்பயிற்சிகளும் ஆங்கில மொழிமூலத்தில் நடத்தப்படவுள்ளன.
மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர், மருந்தாளர், பற்சிகிச்சையாளர், இதயத்துடிப்பு பதிவாளர் உள்ளிட்ட 12 பயிற்சி நெறிகள் 2 வருடகாலத்திற்கு இடம்பெறவுள்ளன.
பொதுவாக க.பொ.த. (சா.த) பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன், க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவில் சித்தியடைந்திருக்க வேண்டும். 18 – 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.