புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2016

மத்தியவங்கி ஆளுனருக்கெதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக  கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் கறுப்பு ஆடை அணிந்து பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் 30ஆம் திகதி பதவிக் காலம் முடிவடையும் அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலத்தை நீடிக்கக் கூடாது, பிணை முறி மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கை மத்திய வங்கிக்கு அருகாமையில் ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலக வீதி ஊடாக பயணித்துக்கொண்டிருப்பதாகவும், இதன்காரணமாக குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் மட்டுமன்றி எதிர்வரும் நாட்களிலும் இந்தப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்

ad

ad