நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்த் அல் ஹுசைனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் 32 ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் நீதியமைச்சர் விஜயதாஸ
ராஜபக்ஷ ஜெனீவாவுக்கு சென்றுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மனித உரிமை நடவடிக்கைகள் குறித்தும் உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.