கபாலி திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேவராஜன் என்பவர் தொடர்ந்த அந்த வழக்கில், திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கபாலி திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறியுள்ளார்.
இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது, படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும், ரசிகர்களே கூடுதல் கட்டணம் கொடுப்பதால் எப்படி தடை விதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்