புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2016

சானியாவிடம் இருந்து பிரியக்காரணம் என்ன? மார்ட்டினா ஹிங்கிஸ் விளக்கம்

பெண்கள் டென்னிஸ் இரட்டையரில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, சமீப காலமாக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. இந்த நிலையில், வெற்றிகரமாக வலம் வந்த சானியா மிர்சா- மார்டினா ஹிங்கிஸ் இணை பிரிவதாக அறிவித்துள்ளது. இந்த இணை பிரிந்ததற்கு தனிப்பட்ட காரணங்கள் காரணமா? அல்லது ஆட்டம் தொடர்பான காரணமா என்று ஊடங்களில் விவாதங்கள் கொடி கட்டி பறந்தன. 

இந்த நிலையில், இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் மார்டினா ஹிங்கிஸ் தனது இன்ஸ்டகரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் மார்டினா ஹிங்கிஸ் கூறியிருப்பதாவது:- மூன்று கிரான்ட்ஸ்லாம் வெற்றி, 11 டபிள்யூடிஏ பட்டங்களை இரட்டையர் பிரிவில் நாங்கள் வென்றுள்ளோம். வேறு வீரர்களுடன் விளையாடலாம் என்று நாங்கள் பரஸ்பர புரிதலோடு ஒத்துக்கொண்டு பிரிந்தோம். 

எங்களின் கடந்த கால வெற்றிகளை முன்வைத்து மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.  துரதிருஷ்டவசமாக அதை எங்களால் பூர்த்தி செய்ய இயலவில்லை. ஆட்டத்தின் முடிவுகளை வைத்து முழுக்க முழுக்க தொழில் ரீதியிலான பிரிவு இது ஆகும். தொழில் முடிவு எங்களின் தனிப்பட்ட நட்புறவை பாதிக்காது. இந்த விளக்கம்  கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் என்று நம்புகிறேன்” என்றுதெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் முடிந்ததும் வரக்கூடிய சர்வதேச போட்டிகளில் சானியா மிர்சா, தரவரிசையில் 21–வது இடம் வகிக்கும் பார்போரா ஸ்டிரிகோவாவுடனும் (செக்குடியரசு), மார்ட்டினா ஹிங்கிஸ், அமெரிக்காவின் கோகோ வன்டேவெஜூடன் இணைந்து ஆட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சானியாவிடம் இருந்து பிரியக்காரணம் என்ன? மார்ட்டினா ஹிங்கிஸ் விளக்கம்

ad

ad