புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2016

டிஎன்பிஎல்: இறுதிச்சுற்றில் தூத்துக்குடி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு
முன்னேறியுள்ளது.
அந்த அணி தனது இறுதிச்சுற்றில் 38 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியைத் தோற்கடித்தது. திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிநவ் முகுந்த் 55 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 91 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 31 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 48 ரன்களும் குவித்தனர். திண்டுக்கல் தரப்பில் சன்னி குமார் சிங் 3 விக்கெட் எடுத்தார். பின்னர் ஆடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜெகதீசன் 59, வெங்கட்ராமன் 40 ரன்கள் எடுத்தனர். தூத்துக்குடி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
சூப்பர் கில்லீஸ்-கோவை மோதல்: சென்னையில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் 2-ஆவது அரையிறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸýம், கோவை கிங்ஸýம் மோதுகின்றன

ad

ad