முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10வது நாளான நேற்று மாலை தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அப்பல்லோ வந்து முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை சந்தித்து சென்றார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், முதல்வரின் உடல்நிலை தேறி வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 11வது நாளான இன்று காலை 10.30 மணிக்கு தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அப்பல்லோவுக்கு வந்தனர். இதையடுத்து கமிஷனர், டிஜிபியும் வந்தனர். அங்கே ஆலோசனை நடத்தியதாக தகவல். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அமைச்சர்கள் அனைவரும் அப்பல்லோவை விட்டுச்சென்றனர்.