புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2016

ப்பல்லோவில் அமைச்சர்கள் 1 மணி நேரம் ஆலோசனை


முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10வது நாளான நேற்று மாலை தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அப்பல்லோ வந்து முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை சந்தித்து சென்றார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில்,  முதல்வரின் உடல்நிலை தேறி வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 11வது நாளான இன்று காலை 10.30 மணிக்கு தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அப்பல்லோவுக்கு வந்தனர்.  இதையடுத்து கமிஷனர், டிஜிபியும் வந்தனர். அங்கே ஆலோசனை நடத்தியதாக தகவல்.   ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அமைச்சர்கள் அனைவரும் அப்பல்லோவை விட்டுச்சென்றனர்.

ad

ad