ஜெயலலிதா கடந்த 9 நாட்களாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை 6.45 மணிக்கு தமிழக( பொறுப்பு ) ஆளுநர் வித்தியாசாகர் ராவ்ம அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.
ஆளுநர் வருகையினால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம், சிகிச்சை குறித்து கேட்டறிகிறார் ஆளுநர்.