புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2016

விக்கியை கைது செய்யுமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம்

எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னே ஸ்வரனுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி  கண்டனம்
தெரிவித்துள்ளதை வரவேற்று ள்ள சிங்க இரத்தம் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள சிங்ஹலே அமைப்பு, வட மாகாண முதலமைச்சரை கைது செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் மாலை புறக்கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்திய சிங்ஹலே அமைப்பு, இந்த வலியுறுத்தலை முன்வைத்து ள்ளது.

இந்த சிங்கள அடிப்படை வாத அமைப்பைச் சேர்ந்த 50 பேர் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் பின்னர் ரயில் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாதை யில் பதாதைகளை ஏந்தியபடி ஊர்வலமொன்றையும் நடத்தினர்.

‘வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சிங்களவர்களை வடக்கிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் புத்தர் சிலைகளை உடைத்து, அங்குள்ள பிக்குகளை வெளியேற்ற வேண்டும் என்றும் கூறி அப்பகுதிகளில் உள்ள மக்களை தூண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக இருந்த அரசியல் அமைப்புக்களும் வடக்கில் இனவாதத்தை பரப்பிக்கொண்டிருக்கும் வேளையில் இவர்கள் மீண்டும் யுத்தமொன்றை ஏற்படுத்துவதற்காகவா முயற்சிக்கின்றார்கள்? இனவாதத்தை கைவிட்டு இந்த நாடு சிங்கள நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். இலங்கை தமிழரசுக் கட்சி விக்னே ஸ்வரனின் கூற்றுக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளதை நாங்கள் வரவேற்கின்றோம். எனவே அரசியலமைப்பை மீறியுள்ள வடக்கு முதலமைச்சரை கைது செய்யும்படி அரசா ங்கத்திடம் கோருகின்றோம் - என்றார்.

ad

ad