புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2018

மகிந்த வெல்வது சந்தேகமா ? அமைச்சு பதவியை தூக்கி எறி ந்து ரணில் பக்கம் ஓடிய பிரதி அமைச்சர் மகிந்த ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலகினார் மனுச நாணயக்கா


மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் பிரதியமைச்சராக பதவியேற்ற காலி மாவட்ட நாடாளும
ன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளிற்கு துணைபோகக்கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மனுச நாணயக்கார தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மகிந்த ராஜபக்சவை நீங்கள் பிரதமராக நியமித்து நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தியதை தொடர்ந்து கடந்த சில நாட்கள் குழப்பம் மிகுந்தவையாக காணப்படுகின்றன.
அவ்வேளை நான் உங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன்,நீங்கள் தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு புதிய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பணியாற்றும் அரசியல் முடிவையெடுத்தேன்
உங்களின் நடவடிக்கையினால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளை தெளிவுபடுத்தி சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையொன்றை வாசிக்க நேர்ந்தது.
பதவிப்பிரமாணம் செய்துள்ள புதிய அரசாங்கத்தை எந்த உலகநாடும் ஏற்றுக்கொள்ளவில்லை.இது எனது ஜனநாயக மனச்சாட்சியை ஆழமாக சிந்திக்க தூண்டியுள்ளது,நான் எனது அரசியல் சகாக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் இவ்வாறான சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளிற்கு துணைபோகக்கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன்.
இதன் காரணமாக எனது ஜனநாயக- அரசியல் நம்பிக்கைகள்  மற்றும் மனச்சாட்சியின்  அடிப்படையில் நான் எனது இராஜினாமாவை சமர்ப்பிக்கின்றேன்.
2015  ஜனவரி 8 ம் திகதி தேர்தலில் உங்களிற்கு கிடைத்த ஆணையும் அதன் பின்னர் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதும் அதிகார துஸ்பிரயோகங்களையும்  ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் ஒழி;ப்பதற்கே என்பதை நான் உங்களிற்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
இன்று முதல் நான் சபாநாயகரின் நிலைப்பாட்ட ஏற்று  பிரதமராக ரணில் விக்கிரமசி;ஙகவையே ஏற்பேன் என தெரிவித்துள்ளார்

ad

ad