புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2019

பாகிஸ்தானுக்கான விமானசேவைகளை இரத்துச் செய்தது சிறிலங்கா

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன்
விமான சேவை அறிவித்துள்ளது.

இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான பதற்றநிலை இன்று தீவிரமடைந்துள்ளது. இந்திய – பாகிஸ்தான் எல்லையில் இருதரப்பும், போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில், பாகிஸ்தான் விமான போக்குவரத்து அதிகார சபை, தமது நாட்டின் வான் பரப்பின் ஊடான விமானப் பயணங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.

அத்துடன் பாகிஸ்தானில் உள்ள விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதையடுத்து,கொழும்பில் இருந்து கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது

ad

ad