புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2019

திருகோணமலையில் பதற்றம்: அரச தனியார் நிறுவனங்கள் இடைநிறுத்தம்; வீடுகளை நோக்கி வேகமெடுக்கும் மக்கள்

திருகோணமலையில் வங்கிகள் உள்ளிட்ட அரச தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு ஊழிர்கள் மற்றும்
இதர தேவை காரணமாக வெளியில் சென்ற பொது மக்கள் என அனைவரும் வீடுகளை நோக்கி செல்வதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பல இடங்களில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றுமாறும் அவ்வாறு அகற்றப்படாத வாகனங்கள் சந்தேகத்தின் பேரில் பரிசோதிக்கவுள்ளதாகவும் ஒலிபெருக்கி மூலம்பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஆகவே தான் பொதுமக்கள் தமது சுய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இவ்வாறு நிறுவனங்களை மூடி விட்டு வீடுகளுக்குச் செல்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ad

ad