புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2019

சம்பந்தனுக்கு ரணில் உறுதி

கல்முனை வடக்குப் பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கல்முனை வடக்குப் பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என்று அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியளித்துள்ள போதும், அது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. அதையடுத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
"கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விரைவில் தரமுயர்த்தப்படும். முஸ்லிம் தரப்பினரின் இணக்கத்துக்காகவே காலம் தாமதித்தது. சபைக்கான கணக்காளர் நியமிக்கப்பட்டு முழு சபையாக இயங்க ஆவணம் செய்யப்படும்" என்று சந்திப்பில் உறுதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது

ad

ad