புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2019

ட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்

நாவற்குழி இராணுவ முகாம் கட்டளை அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கே. குருபரன் மற்றும் சட்டத்தரணி எஸ். சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்துக்குள் ஒளிப்படம் எடுத்த அரச புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
நாவற்குழி இராணுவ முகாம் கட்டளை அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கே. குருபரன் மற்றும் சட்டத்தரணி எஸ். சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்துக்குள் ஒளிப்படம் எடுத்த அரச புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்துக்குள் அமைந்துள்ள சட்டத்தரணிகள் ஓய்வறைக்கு முன்பாக சட்டத்தரணிகள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்த போது, அந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்து அரச புலனாய்வாளர்கள் என நம்பப்படும் சிலர் சட்டத்தரணிகளை தமது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளனர்.

அதனைக் கண்ட சட்டத்தரணி கே. குருபரன், அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்து ஒளிப்படம் எடுத்தவர்களைத் துரத்திச் சென்ற போதும் அவர்கள் வாகனத்தில் ஏறித் தப்பித்துவிட்டனர்.

'சட்ட மா அதிபர் திணைக்களத்தின் வாகனத்தில் பயணித்த அரச புலனாய்வாளர்களே எம்மை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்தனர். மேலதிக மன்றாடியார் அதிபதி செய்திய குணசேகர, பயணித்த வாகனத்திலிருந்தும் புலனாய்வாளர் ஒளிப்படம் எடுத்தார். இதுதொடர்பில் சட்ட மா அதிபருக்கு முறைப்பாடு வழங்க உள்ளோம். அவர் இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றோம்' என்று சட்டத்தரணி கலாநிதி கே. குருபரன் தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2017ஆம் திகதி நவம்பர் மாதம் இந்த ஆள்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த ஆள்கொணர்வு மனுக்களை பூர்வாங்க விசாரணையுடன் தள்ளுபடி செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் பல ஆட்சேபனைகளை முன்வைத்தது.

எனினும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனைத்து ஆட்சேபனைகளையும் நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விசாரணை ஒன்றை முன்னெடுத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு உரிய பரிந்துரையை வழங்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டார்.

அதேவேளை, நாவற்குழி இராணுவ முகாமில் காணாமல் போன இளைஞர்கள் தொடர்பாக, யாழ்.மேல் நீதிமன்றுக்கு பரிந்துரை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஒக்டோபர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, சாவகச்சேரி நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.

வழக்கு, இன்றைய தினம் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாவற்குழி இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான, இராணுவத்தளபதி சார்பாக ஆஜரான பிரதிமன்றாடியார் நாயகம் சேத்திய குணசேகர, இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் கவனத்தில் இருப்பதால், இன்று எடுத்துக்கொள்ளக் கூடாது எத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பான ஆஜரான சட்டத்தரணி கு.குருபரன், எஸ்.சுபாசினி ஆகியோர் இது தொடர்பாக மனுதாரர்களுக்கு அறிவித்தல் தரப்படவில்லை எனவும் உயர் நீதிமன்றத்தால் எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படக் கூடாதென எந்தவித கட்டளைகளும் ஆக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த சாவகச்சேரி நீதவான் து.கஜநிதிபாலன், ஏற்கெனவே ஒதுக்கப்பட்டவாறு விசாரணையை ஒத்திவைக்கலாம் எனக் குறிப்பிட்டு, வழக்கை ஒக்டோர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ad

ad