வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு பலரது பெயர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசேட சத்திர சிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் ஆளுநர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்திய கலாநிதி அரவிந்தன் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விசேட சத்திர சிகிச்சை வைத்தியராக பணியாற்றியிருந்தார். தந்போது அவர் கொழும்பில் பணியாற்றி வருகின்றார்