புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2019

இலங்கையில் தமிழர் பகுதியில் அவசர சட்டம் பிறப்பிப்பு: ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில்
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்
தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். நவ.18-ந் தேதி, அவர் அதிபராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். இதையடுத்து அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக கோத்தபய நியமித்தார்.
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். நவ.18-ந் தேதி, அவர் அதிபராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். இதையடுத்து அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக கோத்தபய நியமித்தார்.


2 தமிழர்கள் உள்பட 16 பேர் அடங்கிய இடைக்கால அமைச்சரவையையும் நியமித்தார்.பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும். மக்கள் நலனுக்காக அரசு செயல்படும் என கோத்தபயா தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையாக கோத்தபய ராஜபக்சே புதிய அவசர சட்டம் பிறப்பித்துள்ளார். அதன்படி, தமிழர்கள் வாழும் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படையினர் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபடுவர்

ad

ad