20 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பின் மீது நேற்று விவாதம் இடம்பெற்றது. நேற்றுக் காலை 10 மணி தொடக்கம், இரவு 7.30 மணி வரை விவாதம் இடம்பெற்றது.
இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் விவாதத்தின் பின்னர், இரவு 7.30 மணிக்கு இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
20 ஆவது திருத்தச் சட்டம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது