புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2020

இருபதாவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கவேண்டும்-ஐக்கியதேசிய கட்சி

Jaffna Editor
இருபதாவது திருத்தத்திற்கு வாக்களிப்பதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவிர்க்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

20வது திருத்தத்தின் பல பிரிவுகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியம் என உச்சநீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ள போதிலும் 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தை சமர்ப்பிப்பது விவாதிப்பது என அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரிவுகளை இந்த தரப்பினர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்னர் சமர்ப்பிக்கவில்லை என தெரிவித்துள்ள ஐக்கியதேசிய கட்சி ஆகவே இவை தேவையற்றவை மக்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தக்கூடியவை என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

எங்கள் மக்களின் உரிமையான எங்கள் அரசமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள பாரம்பரியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்து ஒரு கட்சியாக நாங்கள் கவலையடைந்துள்ளோம் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ad

ad