புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2021

வட்டக்கச்சியில் கொலை செய்யப்பட்டவரின் மனைவி, உறவினர்கள் மீது பொலிசார் தாக்குதல்!

www.pungudutivuswiss.com


கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் அண்மையில் கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் மீது இன்று காலை  பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் அண்மையில் கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் மீது இன்று காலை பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் வட்டக்கச்சி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற

கத்திக் குத்துச் சம்பவத்தில் அருளம்பலம் துஷ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்தர் உயிரிழந்தார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 5 பேர் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

உயிரிழந்த நபரின் வீட்டிலிருந்த பொருட்களை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் உறவினர்கள் பொலிஸாரின் உதவியுடன் இன்று காலை எடுத்துச் செல்ல முற்பட்டனர். இதன்போது அங்கு ஒன்று கூடிய கிராம மக்கள், கத்திக்குத்துக்கு பலியானவரின் மனைவி மற்றும் உறவினர்கள் , பொலிஸார் சந்தேக நபர்களுக்கு சார்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்தினர்.

இதனையடுத்து அவர்கள் மீது பொலிஸார் சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டபோது கத்தியால் குத்திய நபரின் வீட்டில் தீ பரவல் ஏற்பட்டது.வீட்டில் ஏற்பட்ட தீ பரவலை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு தீ விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

ad

ad