புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2021

இலங்கையில் பேஸ்புக் பதிவுகள் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது-சாணக்கியன்

www.pungudutivuswiss.com
சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவுகளை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
 
பாராளுமன்றத்தில் இன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவுகளை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசாங்கம் கைது செய்துள்ளது. இவர்களை பிள்ளையானை விடுதலை செய்ததை போன்று விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
 
இதன்போது பதிலளித்த அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, அரசாங்கம் எடுக்கும் முயற்சியை சீர்குலைக்க வேண்டாம் என்றும் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உள்ள நிலையில் நேற்று மட்டும் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்றார்.

ad

ad