புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2023

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் ட்ரோன்கள்!

www.pungudutivuswiss.com

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் திங்களன்று உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவற்றில் சில சிதைவுகள் நகர மையத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு அருகில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் திங்களன்று உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவற்றில் சில சிதைவுகள் நகர மையத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு அருகில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதலால் மாஸ்கோ மக்கள் திடுக்கிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மேயர் செர்ஜி சோபியானின் கூறும்போது கடுமையான சேதம் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

இந்த நிலையில் ஒடெசா மீது நடந்த ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக உக்ரைன் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இதற்கிடையில், மாஸ்கோ அதிகாரிகளின் கூற்றுப்படி , இரண்டு உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்ய தலைநகர் மீது வீழ்த்தப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் மின்னணு போர் முறைகளால் கட்டுப்படுத்தப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

ad

ad