புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2023

யாழ்ப்பாணத்தில் அரசியல் கலந்துரையாடல் - ஆட்களை விட ஆசனங்களே அதிகம்! Top News [Sunday 2023-07-16 07:00]

www.pungudutivuswiss.com
அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் - இந்தியாவின் வகிபாகமும் பற்றிய கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் - இந்தியாவின் வகிபாகமும் பற்றிய கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், அகில இலங்கைத் தமிழர் மகாசபை தலைவர் கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக சி.தவராசா,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் பூ.பிரசாந்தன், இலங்கைத் தமிரசுக் கட்சி சார்பாக நிர்வாக செயலாளர் எக்ஸ்.குலநாயகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் திருநாவுக்கரசு சிறீதரன், சமத்துவக் கட்சி தலைவர் மு.சந்திரகுமார், ஈழவர் ஜனநாயக முன்னணி செயலாளர் நாயகம், இராஜநாதன் பிரபாகரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதி பா.கஜதீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ad

ad