இதில் 9 பேர் வரை கொல்லப்பட்டதோடு 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் உக்ரைனிய பகுதிக்குள் அத்துமீறி முன்னேறும் ரஷ்ய வீரர்களை தடுத்து நிறுத்துவதற்காக இரும்பு, பழைய மரம், டயர்கள் போன்றவற்றை கொண்டு போலியான ஆயுதங்களை தயாரித்து போலி ஆயுத குவியல்களை ஆங்காங்கே உக்ரைனிய வீரர்கள் வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த போலி ஆயுத குவியல்களை நிஜமான ஆயுத குவியல் என நினைத்து ரஷ்ய வீரர்கள் பின் வாங்கியுள்ளனர். இதனால் உக்ரைன் போர் பாதிப்புகளில் இருந்து சிறிது தப்பி இருப்பதோடு பல வீரர்களின் உயிர்களும் தப்பியுள்ளது. இதையடுத்து தங்களுடைய தந்திரமான உத்தி முன்வரிசையில் கைகொடுத்து இருப்பதாக உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். |