![]() தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பானது யாழ்ப்பாணத்திலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது |
-
9 ஜன., 2023
விக்கி - மணி திடீர் சந்திப்பு- கூட்டணி அமைத்து போட்டியிட இணக்கம்!
யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப்
கல்வித் தகைமையை மறைத்த தமிழ் எம்.பிக்கள்
![]() நாடாளுமன்ற உறுப்பினர்கள் 208 பேரினது கல்வி தகைமை தொடர்பான விபரங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கல்வி தகைமையில் பின்தங்கியுள்ளமை தெரியவந்துள்ளது |
வடக்கு ரயில்கள் இன்று முதல் அனுராதபுரத்துடன் நிறுத்தம்!
![]() கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ரயில்கள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. |
20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின-பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம்
![]() உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு நேற்று மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தில் சிறீலங்கா பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும், கண்டியில் இரண்டு சுயேட்சைக் குழுக்களும், பண்டாரவளை மாநகர சபைக்காக ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என அவர் கூறியுள்ளார். |
பொற்பதியில் நாளை புலிகளின் ஆயுதங்களை தேடி தோண்டும் பணி!
![]() கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. |
அனைத்து தமிழ் கட்சிகளையும் ஓரணியில் திரளக் கோரி நான்காவது நாளாக போராட்டம்!
![]() அனைத்து தழிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க என வலியுறுத்தும் வகையிலான போராட்டம் 4வது நாளாக திருகோணமலையில் இடம்பெற்றது. இன்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து தொடர்ச்சியாக குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது |
கூட்டமைப்பாக போட்டி - வேறுபட்ட வழிகளை கையாள தமிழரசு கட்சி முடிவு!
![]() தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
8 ஜன., 2023
கடைசி போட்டியில் இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா
அதிவேக சதம் அடித்த சூர்யகுமார், தொடரை வென்ற இந்தியா - ஆட்டம் எப்படி இருந்தது?
7 ஜன., 2023
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம்!
![]() இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று காலை கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது. |
எல்லையில் நான்கு தமிழ் இளைஞர்கள் மரணம்!

யாழில் புதைக்கப்பட்ட சிசு! ஏன் சிசுவைப் புதைத்தேன்:தாயார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்-குற்றப் பார்வை
இலங்கையின் பல பகுதிகளில் குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
தனித்தா- கூட்டாகவா போட்டி - 17ஆம் திகதியே தீர்மானம்!
|
வெள்ளைக்குள் மறைந்து வந்த சிவப்பு சிக்கியது!
![]() சிவப்பு சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனியின் ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. வெள்ளை சீனி என்று கூறி 1,200 மெற்றிக் தொன் சிவப்பு சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 600 மெற்றிக் தொன் சிவப்பு சீனி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது |
யானை- மொட்டு கூட்டு - இன்னமும் முடிவில்லை!
![]() உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார் |
யாழ். மாநகர சபைக்கு 19ஆம் திகதி புதிய முதல்வர் தெரிவு!
![]() யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு வரும் 19 ம் திகதி இடம்பெறவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது |
யாழ். மாநகரத்திற்கு புதிய முதல்வர் தெரிவு
6 ஜன., 2023
ஓரணியில் திரளக் கோரி இரண்டாவது நாளாக போராட்டம்!
![]() வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு’ அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு செயல்படக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. |
தைப்பொங்கல் தினத்தன்று காணி விடுவிப்பு குறித்து அறிவிப்பு!
![]() வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் |
கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!
![]() இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பான இறுதி ஏற்பாடுகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை |
கர்நாடகாவில் 38 இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்!
![]() கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர் |
நாளை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்!
![]() தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது |
5 ஜன., 2023
தனித்தா- கூட்டாகவா போட்டி? - முடிவு இன்னும் இல்லை!
![]() உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்து போட்டியிடுவதா அல்லது ஒன்றிணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார். |
தேர்தலில் இருந்து ஒதுங்கினார் ஜனாதிபதி ரணில்
![]() உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எந்தவொரு தேர்தல் நடவடிக்கைகளிலும் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் |
சம்பந்தனைத் தேடிச் சென்ற மஹிந்த
![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இல்லத்துக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரிடம் நலம் விசாரித்தார். |
சைக்கிளுக்கு வாக்களியுங்கள் - பிரசாரத்தை தொடங்கினார் கஜேந்திரகுமார்
![]() உள்ளூராட்சி சபைத் தேர்தலை சந்திக்கத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் |
துயிலும் இல்லத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் - உடைத்தெறியப்பட்ட பெயர் பலகை
அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த சுப்ரீம் கோர்
தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை - நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
![]() உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை நாடாளுமன்றில் நாளை முன்வைக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். |
யாழ். மாநகர சபை உறுப்பினர்களைச் சந்திக்கிறார் ஆளுநர்!
![]() யாழ். மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய வருமாறு, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார் |
ஆளுநரின் அழைப்பு - கூட்டமைப்பு உறுப்பினர்கள் நிராகரிப்பு!
![]() யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநரின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் தமக்குப் பங்குபற்றும் எண்ணம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர் |
4 ஜன., 2023
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பு
கொழும்பில் சற்றுமுன் ஆரம்பமான போராட்டம்! பெருமளவு பொலிஸார் குவிப்பு
மார்ச் 10க்கு முன்னர் தேர்தல் ; வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிப்பு
தேர்தலுக்குத் தடை கோரி உயர்நீதிமன்றில் மனு!
![]() உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்தும் நடவடிக்கைகளை தடுத்து எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் டப்ளியூ.எம்.ஆர். விஜேசுந்தர, இந்த எழுத்தாணை மனுவை ( ரிட் மனு) தாக்கல் செய்துள்ளார் |
இன்று வெளியாகிறது தேர்தல் அறிவிப்பு!
![]() 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன |
கஞ்சிபான தப்பியோட்டம் - புலனாய்வு அமைப்புகள் மீது அதிருப்தி!
![]() பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபானை இம்ரான் ராமேஸ்வரத்தில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து இலங்கையின் புலனாய்வு வலையமைப்பு தொடர்பில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தா |
வெளிநாடு ஒன்றில் 18 இலங்கை பெண்கள் தலைமறைவு
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் கீழ் பாதுகாப்பு மையங்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
இலங்கைக்கு எதிரான முதல் டி-20: இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
3 ஜன., 2023
வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தை - போராட்டங்களை நடத்த முடிவு!
![]() வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கடந்த வருடம் நவம்பர் 8 ம் திகதி ஒருங்கிணைந்த வடகிழக்குக்குள் மீளப் பெறமுடியா சமஸ்டியை வலியுறுத்தி பிரகடனத்தை வெளியிட்டோம். இந்நிலையில் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் வரவேற்கின்றோம் என வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர் |
ரெலோ, புளொட் கடிதம் - சம்பந்தன் உடனடியாக பதிலளிக்க மறுப்பு!
![]() தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் எழுதிய கடிதம் நேற்று மாலை கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்திய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இது தொடர்பில் அவசரப்பட்டு பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார் |
மார்ச் 4ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்?
![]() உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 04 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. |
யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஆளுநர் அழைப்பு
யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய வருமாறு , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
தந்தை செல்வாவுக்கு அருகே நாபா, உமாவுக்கு சிலைகள்!
![]() வவுனியா நகர மத்தியில், தந்தை செல்வாவின் சிலைக்கு அருகாமையில், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபா மற்றும் புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் ஆகிய இருவருக்கும் சிலை வைப்பதற்கான கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதற்கான அனுமதி, வட மாகாண ஆளுநரிடம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. |
கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடத் தயார்!
![]() உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோரப்பட்டால் அது குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார் |
4 நாள் குழந்தையின் சடலம் நாய்கள் தின்ற நிலையில் மீட்பு!- பெண் கைது.
![]() யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் தின்ற நிலையில் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் 34 வயதான பெண் ஒருவருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் |
கடவுச்சீட்டு இல்லாமல் ஐரோப்பாவுக்குள் நுழைய குரோசியாவை ஏற்றுக்கொண்டது ஐரோப்பிய ஒன்றியம்
2023இல் டொரண்டோவில் பிறந்த முதல் குழந்தை சஞ்ஜித்
![]() ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு டொரண்டோவில் பிறந்த சஞ்ஜித் என்ற குழந்தை, 2023 ஆம் ஆண்டில் பிறந்த நகரின் முதல் குழந்தைகளில் ஒன்றாகும். நோர்த் யோர்க் பொது மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தையை பெற்றெடுத்த மதியழகன் குடும்பத்தை வாழ்த்தி மற்றும் படத்தையும் வெளியிட்டுள்ளது நோர்த் யோர்க் பொது மருத்துவமனை |
இம்மாத இறுதிக்குள் அமைச்சரவை மறுசீரமைப்பு!
![]() அமைச்சரவை மறுசீரமைப்பு மற்றும் ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர் நியமன நடவடிக்கைகளை இம்மாத இறுதிக்குள் நிறைவுப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. |
அமெரிக்க குடியுரிமைக்கு கோட்டா மீண்டும் விண்ணப்பம்!
![]() முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் டிசம்பர் 2022 இல் இலங்கையை விட்டு வெளியேறினார், தற்போது விடுமுறையில் டுபாயில் இருக்கிறார். |
2 ஜன., 2023
2 வருட காலமாக சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய பருத்தித்துறை பொலிஸார்
1 ஜன., 2023
யாழ். மாநகர முதல்வர் தேர்வு இனி இல்லை! - கலைப்பதற்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை.
![]() யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார் |
விடைபெற்றார் மகேசன்- பதில் அரச அதிபரானார் பிரதீபன்!
![]() யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமையுடன் யாழ். மாவட்டச் செயலர் க. மகேசன் பதவி விலகியுள்ளார். |
31 டிச., 2022
பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறினார் முக்கிய பிரபலம்
புதிய அணியுடன் ஆண்டுக்கு 175 மில்லியன் ஒப்பந்தம்! பரபரப்பான சூழலில் கையெழுத்திட்ட ரொனால்டோ
இனி யாழ்.மாநகர முதல்வர் தெரிவை மேற்கொள்ள முடியாது
30 டிச., 2022
யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத மாற்ற கொள்கையுடையவரை யாழ்.மாவட்ட செயலராக நியமிக்க வேண்டாம்!
தாயை தகனம் செய்த 1 மணி நேரத்தில் நாட்டுக்காக வந்த பிரதமர் மோடி.. சோகத்தை மறைத்து கொடியசைத்த தருணம்
காந்தி நகரில் உள்ள மயானத்தில் ஹீரா பென் உடல் தகனம்; சிதைக்கு தீ மூட்டினார் பிரதமர் மோடி
இணைய வழியில் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகள்
![]() வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. |
அரசியலமைப்பு சபைக்கு தமிழ் எம்.பியை நியமிப்பதில் தொடர்ந்து இழுபறி!
![]() அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். |
மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்!
![]() உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, தெரிவித்தது |
இலங்கையை விட்டு வெளியேறும் மற்றும் வருகை தரும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஆர்.டி.பி.சிஆர்.பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு
யாழ்ப்பாணத்தில் ராஜ் ராஜரட்ணம்
![]() இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் ராஜ் ராஜரட்ணம் நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலைகள் சேவைகள் பற்றி கலந்துரையாடினர் |
29 டிச., 2022
மன்னாரில் பொலிசாரின் வாகனம் மோதி இளைஞன் உயிரிழப்பு
அமெரிக்காவை புரட்டிப்போட்ட அசுர புயல்: முற்றிலுமாக உறைந்துபோன நயாகரா அருவி
![]() அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போயுள்ளது. கிறிஸ்துமஸ் வார இறுதியில் நியூயார்க் நகரில் வீசிய அசுர புயல், 50 ஆண்டுகளில் மிக மோசமான புயலாக மாறியது. இதுவரை இந்த புயலின் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என காவல்துறையினர் எதிர்பார்ப்பதாக Buffalo நகர மேயர் பைரன் பிரவுன் கூறியுள்ளார். |
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 268- பேருக்கு கொரோனா
யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு ; இதுவரை 15 பேர் உயிரிழப்பு
28 டிச., 2022
வியட்நாமில் மீட்கப்பட்ட 152 பேர் இலங்கையை வந்தடைந்தனர்!
![]() சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்தபோது கப்பல் பழுதடைந்து வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர் |
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வு!
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார் |