புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2023

கூட்டமைப்பாக போட்டி - வேறுபட்ட வழிகளை கையாள தமிழரசு கட்சி முடிவு!

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் நேற்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

இக்கூட்டத்தில் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிருவாகக் குழு, மத்தியகுழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் அந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கருத்து பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றபோது ஒரு சில கருத்துகள் பரிமாறப்பட்டிருந்தன. தற்போது நடைமுறையில் உள்ள உள்ளூராட்சிமுறைமைகளானது ஒரு குறித்த சபையில் ஒரு கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறுவது கடினமானது என்பதை நாங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றோம்.

60 வீதம் வட்டாரத்திற்கும் 40 வீதம் விகிதாசரத்திற்குமாக இருக்கின்றபோது வட்டாரத்தில் முழுமையாக வெற்றிபெற்றாலும் முழுமையாக அறுதிப்பெரும்பான்மையினை பெறுவது கஸ்டமாகும்.

சில அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுக்களை போட்டியிட வைத்து சில நூறு வாக்குகளைப்பெற்று ஆசனங்களை பெற்றதன் காரணமாக வட்டாரத்துடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு உபயோகமாக இருந்திருக்கின்றது.

இன்று மட்டக்களப்பில் நடந்த கூட்டத்தில் எமது மாவட்ட கிளைகள் எட்டிலிருந்தும் கருத்துகள் பெறப்பட்டிருந்தன. சென்ற கூட்டத்தில் தீர்மானித்ததன் படி ஒரு தொழில்நுட்ப ரீதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளும் தேர்தலிலே போட்டியிட்டால் வட்டார கிளையில் ஒரு கட்சி வெற்றிபெறும் போது விகிதாசாரத்தில் இன்னுமொரு கட்சி வெற்றிபெறமுடியும்.

அவ்வாறு செய்யும்போது ஒட்டுமொத்தமாக சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெறகூடியதாகவிருக்கும். இது இலகுவாக எண்கணிதத்திலும் அனுபவத்திலும் கண்டுகொண்ட விடயம். இன்று எல்லா மாவட்டங்களிலிருந்தும் இலங்கை தமிழரசுக்கட்சியின் சின்னமான வீட்டு சின்னத்தில் போட்டியிடவேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளும் அவ்வாறே போட்டியிடுவதும் சிறந்தது என கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அனைவராலும் தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்ற கருத்து ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் 10ஆம் திகதியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தையினை நடாத்துகின்ற போது இன்று மத்திய குழுவில் ஏகமனதாக தெரிவிக்கப்பட்ட யோசனை முன்வைக்கப்படும்.

அவர்களோடு பேசி இதன் சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். இங்கு ஊடகங்களிடம் நான் விசேடமாக தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் நாங்கள் எடுத்த தீர்மானம் தனித்துபோட்டியிடும் தீர்மானம் இல்லை.

தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடப்போகின்றது என்று தயவுசெய்து எழுதவேண்டாம்.தமிழ் தேசிய கூட்டமைப்பாகத்தான் போட்டியிடுவோம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ள மூன்று கட்சிகளையும் நன்மையான வகையில் உபயோகப்படுத்தமுடியுமா என்றுதான் பார்க்கின்றோம்.

இல்லாதுபோனால் சுயேட்சைக்குழுக்களை வைத்து அந்த விகிதாசர ஆசனங்களை கைப்பற்றவேண்டிய நிலையேற்படும்" என்றார்

ad

ad