புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2012


யாழில் தாயையும் 2வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய தம்பதியர் கைது
யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரையும் அவரது 2 வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய இரு சந்தேகநபர்களை கைது செய்ததாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நேற்று முன்நாள் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் கல்லூரி வீதியில் வைத்து குறித்த தாயும் அவரது இரண்டு வயது மகனும் கடத்தப்பட்டனர்.
தாயையும் அவரது இரண்டு வயதுச் சிறுவனையும் கடத்தி சென்ற குற்றத்திற்காக கணவன் மனைவி ஆகிய இரு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக அவர் கூறினார்.
கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த   தாயும் 2 வயதான மகனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

ad

ad