புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2012


மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து போராட்டம் நடத்த தயாராகும் தமிழக அமைப்புகள்!
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச, வரும் 21ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார் ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இலங்கையில் தமிழர்கள் படுகொலைக்கு காரணமான அதிபர் ராஜபக்சவுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ளது.
ராஜபக்ச மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிங்கள தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
மேலும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் எந்த பகுதியிலும் இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். பிரதமரிடமும் முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச, வரும் 21ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார்.
அவர் மத்திய பிரதேசம் சாஞ்சியில் நடைபெற இருக்கும் புத்த பல்கலைக்கழக திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
இந்த தகவலை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

ad

ad