புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2013

நேற்றிரவு வெளியான க.பொ.தர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சுன்னாகம் வாழ்வகத்திலிருந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்விபயிலும் மாணவன் 3 பாடங்களிலும் ஏ தர சித்திபெற்று சாதனை படைத்துள்ளார். 

சொர்ணலிங்கம் தர்மதன் என்ற மாணவனே இந்தச் சாதனையைப் புரிந்தவராவார். 


தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி கற்ற இவர் தமிழ், இந்துநாகரிகம் மற்றும் அரசியல் ஆகிய 3 பாடங்களிலும் முதல்தர சித்தியைப் பெற்று மாவட்டத்தில் 4 ஆம் இடத்தையும் தேசிய ரீதியில் 54 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். 

குறித்த மாணவன் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ad

ad