பாணந்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்பு
பாணந்துறை, சாகரவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து இன்று காலை 10 மணியளவில் குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .